கதைக்கு தேவைப்பட்டால் காதல் காட்சிகளிலும், கவர்ச்சியாகவும் கண்டிப்பாக நடிப்பேன் என்று கூறியுள்ளார் நடிகை காஜல் அகர்வால்.

ஹிட் நாயகி

பழனி படத்தின் மூலம் 2008 ஆம் ஆண்டு தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். இந்த படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்திருந்தார் காஜல். பேரரசு இயக்கத்தில் வெளியான இந்த படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறவில்லை. தெலுங்கில் அதிகம் கவனம் செலுத்தி வந்த நடிகை காஜல் அகர்வால், ‘நான் மகான் அல்ல’ படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். அதன் பிறகு மாற்றான், துப்பாக்கி போன்ற படங்களின் ஹிட்டால், முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்தார் காஜல். எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரணுடன் இணைந்து நடித்த ‘மகதீரா’ திரைப்படம் தெலுங்கில் மிகப்பெரிய ஹிட் ஆனது.

திருமணம் செய்த காஜல்

தெலுங்கு மற்றும் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரத் தொடங்கினார் நடிகை காஜல் அகர்வால். முன்னணி நடிகையாக இருக்கும் போது பலர் திருமணம் செய்து கொள்ள யோசிக்கும் சமயத்தில் 2020ஆம் ஆண்டு மும்பை தொழிலதிபர் கவுதம் கிட்ச்லுவை திருமணம் செய்து கொண்டார் . தற்போது ஒரு குழந்தைக்கு தாயான நடிகை காஜல் அகர்வால், ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், திருமணத்துக்குப் பிறகு நீங்கள் கவர்ச்சியாக நடிப்பீர்களா? என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த காஜல், திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று நான் எந்த கட்டுப்பாடும் விதிக்கவில்லை. இந்த விஷயத்தில் நானும் என் கணவரும் தெளிவாக இருக்கிறோம். கதைக்கு தேவைப்பட்டால் சகநடிகருடன் இணைந்து நெருக்கமாக நடிக்க தான் வேண்டும். நடிக்க வந்த பிறகு, இப்படி நடிக்க மாட்டேன். அப்படி நடிக்க மாட்டேன் என்று கூறுவது சரி இல்லை. சொந்த வாழ்க்கை என்பது வேறு, செய்யும் தொழில் என்பது வேறு, இரண்டையும் தனியாக பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும். கதைக்கு தேவைப்பட்டால் காதல் காட்சிகளிலும், கவர்ச்சியாகவும் நான் கண்டிப்பாக நடிப்பேன் என்று கூறியுள்ளார் நடிகை காஜல் அகர்வால்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here