கொழு கொழு அழகால் ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்திருந்த நடிகை அஞ்சலி விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆரம்பத்தில் வெற்றி

கற்றது தமிழ் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை அஞ்சலி, தனது முதல் படத்திலேயே அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்த படத்தில் ஜீவாவுடன் இணைந்து நடித்திருப்பார் அஞ்சலி. ராம் இயக்கத்தில் வெளியான இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பிறகு இவர் நடித்த அங்காடித் தெரு என்ற படமும் ரசிகர்களுடைய நல்ல வரவேற்பு பெற்றது. அதில் ரங்கநாதன் தெருவில் வேலை செய்யும் தொழிலாளர்களின் அவல நிலையை அப்பாட்டமாக காட்டி இருப்பார் இயக்குநர் வசந்தபாலன். விஜய் ஆண்டனி மற்றும் ஜிவி பிரகாஷ் இணைந்து இசையமைத்திருந்த இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது.

ஹிட் அமையவில்லை

மங்காத்தா, தூங்கா நகரம் போன்ற படங்களில் அஞ்சலி நடித்திருந்தாலும், எங்கேயும் எப்போதும் படம் தான் இவருக்கு கம்பேக் படமாக அமைந்தது. அதன்பிறகு எந்த படமும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இவருக்கு கை கொடுக்கவில்லை. தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று பல மொழிகளில் நடித்திருந்தாலும், குறிப்பிட்ட சில படங்களில் மட்டுமே ஹிட் கொடுத்துள்ளார். ஆனால், தனது துறுதுறு நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்று வைத்துள்ளார். கடந்த மூன்று வருடங்களாக எந்த ஒரு படமும் இவருக்கு சரியாக அமையாத நிலையில், ஜான்சி மற்றும் ஃபால் போன்ற வெப் தொடர்களில் நடித்து வந்தார். இந்த தொடர்களும் எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறவில்லை.

உண்மையா?

நடிகை அஞ்சலி எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்த போது நடிகர் ஜெய் மீது காதலில் விழுந்து தொடர்ந்து பல வருடம் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து பின்னர் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. தற்போது ஜெய் வாணி போஜனை காதலித்து வருகிறார். இந்நிலையில் அஞ்சலி தனது பெற்றோர்கள் சம்மதத்துடன் பிரபல தொழிலதிபரை திருமணம் செய்துக்கொள்ள போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here