சென்னைக்கு வந்த பொழுது எதிர்பாராத விதமாக நடந்த விபத்து குறித்து நடிகை பவித்ரா லட்சுமி பகிர்ந்துள்ளார்.

கவரும் புகைப்படங்கள்

ஓ காதல் கண்மணி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகை பவித்ரா லட்சுமிக்கு, நடிகர் சதீஸுடன் நாய் சேகர் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சதீஷ் நடிப்பில் வெளியான நாய் சேகர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது மலையாளத்திலும் கவனம் செலுத்தி வரும் பவித்ரா லட்சுமி, சமூக வலைதளங்களில் அடிக்கடி போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருவார். அது மட்டும் இல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2விலும் கலந்துகொண்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

மோசமான விபத்து

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகை பவித்ரா லட்சுமி கூறிய விஷயங்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது; “எனக்கு சிறுவயதில் இருந்து படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் என் அம்மாவிற்கு இது பிடிக்காது. என் அம்மா நன்றாக படிக்க வேண்டும் என்று அடிக்கடி கூறுவார். நானும் என் அம்மா படுகின்ற கஷ்டத்தை பார்த்து நன்றாக படித்தேன். நான் சென்னைக்கு வந்தபோது எதிர்பாராத விதமாக ஒரு விபத்து நடந்தது. அந்த விபத்தில் என்னுடைய முகம் மற்றும் கால்கள் அடிபட்டு மோசமான நிலையில் இருந்தேன். என்னுடைய முகத்தில் ஆபரேஷன் நடந்த பிறகு என் முகத்தை கண்ணாடியில் கூட பார்க்க முடியவில்லை. அந்த அளவிற்கு மிகவும் மோசமாக இருந்தது. ஆரம்ப காலத்தில் இந்த விபத்து குறித்து என் அம்மாவிடம் எதையும் நான் கூறவில்லை” என்று கூறியுள்ளார். பவித்ரா லட்சுமி கூறிய இந்த தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here