உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் நலமாக இருப்பதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மருத்துவமனையில் அனுமதி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன், மக்கள் நலப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு புதன்கிழமை மாலை திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இளங்கோவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

நலமாக உள்ளார்

இந்நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை சீராக இருப்பதாகவும், தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இளங்கோவன், சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், மருத்துவ கண்காணிப்புக்கு பின்னர் ஒரு சில நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here