தனக்கு ஏற்பட்ட நஷ்டதிற்கு நயன்தாரா தான் காரணம் என்று நடிகை மம்தா மோகன் தாஸ் வெளிப்படையாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

சிகிச்சைக்கு பிறகு நலம்

மலையாளத்தில் பிரபல நடிகையான மம்தா மோகன்தாஸ், சிவப்பதிகாரம் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்த படத்தில் விஷால், ரகுவரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சிவப்பதிகாரம் படத்திற்குப் பிறகு குரு என் ஆளு, தடையற தாக்க, எனிமி போன்ற சில படங்களில் மட்டுமே மம்தா நடித்து இருந்தார். முழுக்க முழுக்க மலையாளத்தில் அதிக கவனம் செலுத்தி வரும் மம்தாவிற்கு, புற்றுநோய் ஏற்பட்டு சிகிச்சைக்கு பிறகு அவர் அதிலிருந்து மீண்டும் வந்துள்ளார்.

ஒரு ஷாட்டில் கூட இல்லை

இந்நிலையில் தனக்கு ஏற்பட்ட நஷ்டம் குறித்து நடிகை மம்தா மோகன்தாஸ் வெளிப்படையாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார். குசேலன் படத்தில் ரஜினிகாந்த் உடன் நானும் நடித்திருந்தேன். அதில் இடம்பெற்றிருந்த பாடல் காட்சியில் நானும் பங்கேற்றேன். நான்கு நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. படப்பிடிப்பு தளத்தில் ஏதோ தவறு நடப்பது போல உணர்ந்தேன். நான் நினைத்தது போலவே அந்தப் பாட்டில் ஒரு ஷாட்டில் கூட நான் இல்லை. அதற்குக் காரணம் அந்த படத்தில் ஒரு பாட்டுக்கு நடனமாடிய நயன்தாரா தான் என்பதை பிறகுதான் எனக்கு புரிந்தது. நான் அங்கிருந்தால் அவர் நடிக்க வரமாட்டேன் என்று இயக்குநரிடம் எச்சரித்துள்ளதும் எனக்கு தெரியவந்தது. நயன்தாரா ஏன் இப்படி நடந்து கொண்டார் என்று எனக்கு இன்றும் புரியவில்லை என்று கூறியுள்ளார் நடிகை மம்தா மோகன்தாஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here