தனக்கு உடல்நிலை சரி இல்லை என்று தெரிந்த உடன் நடிகர் சிரஞ்சீவி கடவுள் போல் வந்து உதவி செய்ததாக பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

முன்னணி வில்லன்

1988 ஆம் ஆண்டு கலியுகம் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் பொன்னம்பலம். தமிழ் சினிமாவில் முன்னணி வில்லன்களின் லிஸ்டில் கண்டிப்பாக இவரது பெயர் இடம் பெறும். அந்த அளவிற்கு வில்லன் கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்துபவர் நடிகர் பொன்னம்பலம். கிராமப்புறங்களில் இவர் உண்மையிலேயே வில்லன் என்று நினைத்து சாபம்விட்ட கதைகளும் உண்டு. செந்தூரப்பாண்டி, ஹானஸ்ட் ராஜ், தாய் மாமன், பெரிய மருது, நாட்டாமை, கூலி, இந்தியன், சேனாதிபதி உள்ளிட்ட பல படங்கள் இவரது நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தது. அதுமட்டும் இல்லாமல் அருணாச்சலம், வள்ளல், சிம்ம ராசி உள்ளிட்ட படங்களில் இவரது நடிப்பு ரசிகர்கள் மனதில் மிகப்பெரிய இடத்தை பிடித்தது.

உடல்நலம் பாதிப்பு

முன்னணி வில்லன் லிஸ்டில் இருந்த பொன்னம்பலம் சமீப காலமாக எந்த ஒரு படங்களிலும் நடிக்காமல் இருந்தார். சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானார். நடிகர் பொன்னம்பலம் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சொத்துக்காக சொந்த வீட்டில் இருப்பவர்களே இவருக்கு ஸ்லோ பாய்சன் கொடுத்ததாகவும், அதனால் சிறுநீரகப் பிரச்சினை ஏற்பட்டதாகவும் கூறுகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபொழுது மீடியா மூலம் தனக்கு உதவுமாறு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார் பொன்னம்பலம்.

உதவிய சிரஞ்சீவி

இந்த வீடியோவை பார்த்த பலரும் அவருக்கு உதவி செய்து வந்தனர். தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கக்கூடிய சிரஞ்சீவி இவருக்கு செய்த உதவிக்கு பொன்னம்பலம் நன்றி கூறியுள்ளார். இதுகுறித்து நடிகர் பொன்னம்பலம் கூறுகையில்; “எனக்கு உடல்நிலை சரியில்லை அண்ணா என்று ஒரே ஒரு மெசேஜ் மட்டும் தான் அனுப்பினேன். உடனே எனக்கு போன் செய்த சிரஞ்சீவி அருகில் இருக்கும் அப்போலோ மருத்துவமனைக்கு சொல்லுங்கள், மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறினார். அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்ற பொன்னம்பலத்திடம் என்ட்ரி பீஸ் கூட வாங்காமல், கிட்டதட்ட ரூ.45 லட்சம் வரை சிரஞ்சீவி உதவி செய்துள்ளார். ஏதாவது சிறிய உதவி செய்வார் என்று எதிர்பார்த்து உதவி கேட்டேன். ஆனால் இவ்வளவு பெரிய தொகையை அவர் செய்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. கடவுள் போல வந்து எனக்கு உதவினார் சிரஞ்சீவி அண்ணன். கே.எஸ். ரவிக்குமார், கமல்ஹாசன், தனுஷ் உள்ளிட்ட பலரும் தனது படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுக்க உள்ளதாக கூறியுள்ளனர். அதனால் தாடியுடன் புது கெட்டப்பை ட்ரை செய்யலாம் என்று இப்பொழுது தாடியுடன் இருக்கிறேன். அப்பா, சகோதரன் என்று எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிக்கத் தயாராக இருக்கிறேன்”. இவ்வாறு பொன்னம்பலம் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here