தி லெஜன்ட் படத்திற்கு கிடைத்த வரவேற்பையடுத்து விரைவில் அடுத்த படத்தின் அப்டேடை லெஜண்ட் சரவணா அண்ணாச்சி வெளியிடப்போவதாக தகவல்கள் வந்துள்ளது.

பிரம்மாண்டமான தி லெஜன்ட்

ஜேடி ஜெர்ரி இயக்கிய தி லெஜன்ட் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகி வெற்றி பெற்றது. தனது கடை விளம்பரங்களில் முன்னணி நடிகைகளுடன் நடித்து வந்த லெஜண்ட் சரவணா அண்ணாச்சி சினிமாவில் நடிக்க முடிவு செய்து தி லெஜன்ட் படத்தை தயாரித்தார். தி லெஜன்ட் படம் கடந்த ஆண்டு ஜூலை இரண்டாம் தேதி ரிலீஸ் ஆனது. 800 திரையரங்குகளுக்கு மேல் இந்த படம் விநியோகம் செய்யப்பட்டது. இந்த படத்தில் அண்ணாச்சியுடன் இணைந்து ஊர்வசி ரவுத்தாலா, நடிகர் விவேக் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படம் வெளியான புதிதில் பல ட்ரோல்களை சந்தித்து இருந்தாலும், பல பேர் இவருக்கு ஆதரவும் தெரிவித்து வந்தனர்.

அடுத்த படம்

தற்போதெல்லாம் எந்த படம் ரிலீஸ் ஆனாலும் ஒரு மாதத்திற்குள் OTTயில் வந்து விடுகிறது. அந்த வகையில் அண்ணாச்சி நடித்த தி லெஜன்ட் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நீண்ட நாட்களாக OTT ரிலீஸ் குறித்து எந்த ஒரு தகவலும் வெளிவராமல் இருந்தது. இதை தொடர்ந்து சமீபத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் OTT தளத்தில் வெளியாகப் போவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் சரவணா அண்ணாச்சி. OTTயில் வெளியான பிறகு டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் இரண்டே நாளில் நம்பர் 1 நிலைக்கு முன்னேறி சாதனையும் படைத்தது தி லெஜண்ட் திரைப்படம். இதனை படக்குழு பகிர்ந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது. இதனால் சந்தோஷத்தில் இருக்கும் அண்ணாச்சி, கூடிய விரைவில் அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிடுவார் என்று சொல்லப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here