வாழ்க்கையே வெறுத்துவிட்டதால் சாமியாராக போவதாக காமெடி நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் வேதனையுடன் கூறியுள்ளார்.

பிக்கப் டிராப்

அக்குபஞ்சர் மருத்துவரான பவர் ஸ்டார் சீனிவாசன் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையால் “லத்திகா” என்ற படத்தை தானே தயாரித்து நடித்தார். அந்தப் படத்தில் பவர் ஸ்டார் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்ததால் அவருக்கு அது பட்டப் பெயராகவே மாறிவிட்டது. அதன்பிறகு கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தில் சந்தானத்துடன் இணைந்து நடித்தார். அந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நடிகை வனிதாவுடன் இணைந்து “பிக்கப் டிராப்” என்ற படத்தில் நடித்து வருகிறார்.

யாருமே என்னுடன் இல்லை

சில நாட்களுக்கு முன்பு பவர் ஸ்டாரும், வனிதாவுக்கும் திருமணம் ஆனது போல் புகைப்படங்கள் வெளியானது. அந்த புகைப்படம் அந்தப் படத்திற்கான எடுக்கப்பட்ட புகைப்படம் என்று அதன்பிறகே தகவல்கள் வெளியானது. அந்த புகைப்படத்துக்கு கிடைத்த வரவேற்பே படத்தின் ப்ரோமோஷன் ஆகவும் மாறிவிட்டது. இதுவரை ஏராளமான படங்களில் நடித்துள்ள பவர் ஸ்டார், ரஜினிகாந்துடன் இணைந்து ஒரு சின்ன காட்சியிலாவது நடிக்க வேண்டும் என்பதுதான் தனது ஆசை என்று கூறியுள்ளார். சூப்பரும், பவரும் இணைந்துவிட்டால் போதும் என்றும், அதனை காலம் முழுவதும் நினைத்து பார்த்துக் கொண்டே இருப்பேன் என்றும் கூறியுள்ளார்.

சாமியாரா போறேன்

இதை தொடர்ந்து பேசிய பவர் ஸ்டார், “இப்போது நான் என் மனதில் நினைத்துக் கொண்டிருப்பது ஆன்மீகத்தில் ஈடுபட்டு மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்பது மட்டும்தான். வாழ்க்கையை வெறுத்துவிட்டேன். மனிதர்களை பார்த்தாலே வெறுப்பாக இருக்கிறது. எல்லோருமே போலியாக இருக்காங்க. பணம் இருந்த போது என்னுடன் நிறைய பேர் இருந்தார்கள். ஆனால் பணம் சென்ற பிறகு யாருமே என்னுடன் இல்லை” என்று தன் மனதில் உள்ள ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் நடிகர் பவர் ஸ்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here