ஆன்லைன் சூதாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்ற தமிழக மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டுமென தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் ரம்மி

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; “ஆன்லைன் சூதாட்டத்தால் பல குடும்பங்கள் சீரழிந்துவிட்டது. இந்நிலை தொடரக்கூடாது. ஆன்லைன் சூதாட்டம் சம்பந்தமாக தமிழக அரசின் மசோதாவை ஆளுநர் அரசுக்கு திருப்பி அனுப்பியதாக செய்தி வெளிவந்தது.

முற்றுப்புள்ளி

நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், தமிழக சட்டப் பேரவையில் ஆன்லைன் சூதாட்டம் சம்பந்தமாக மீண்டும் மசோதா நிறைவேற்றப்படும் என்ற செய்தி வெளிவந்திருக்கிறது. எனவே இதன் முக்கியத்துவத்தை கருதி தமிழக அரசும், ஆளுநரும் இதில் உள்ள சட்டச்சிக்கலை தீர்க்கக்கூடிய வண்ணம், ஆன்லைன் சூதாட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்”. இவ்வாறு ஜி.கெ. வாசன் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here