டோவினோ தாமஸ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் “அஜயந்தே ரண்டம் மோஷனம்” படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

பிளாக் பஸ்டர் ஹிட்

மலையாளத்தில் முன்னணி ஹீரோவாக இருக்கக்கூடிய நடிகர் டோவினோ தாமஸ், 2012 ஆம் ஆண்டு “பிரபுவின்டே மக்கள்” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழில் அபியும் நானும், மாரி 2 உள்ளிட்ட படத்தில் நடித்துள்ளார். மலையாளத்தில் லூசிஃபர், உயரே, கல்கி உள்ளிட்ட பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்துள்ளார். தற்போது “அஜயந்தே ரண்டம் மோஷனம்” என்ற படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தில் நாயகியாக கீர்த்தி செட்டி நடித்து வருகிறார். மேலும் பாசில் ஜோசப், சுரபி லட்சுமி, ஹரிஷ் உத்தமன் ஆகியோரும் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ஜித்தின் லால் இயக்கும் இந்த படம் பான் இந்தியா படமாக வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

தீ விபத்து

தமிழில் முன்னணி நடிகையாக இருக்கக்கூடிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், “அஜயந்தே ரண்டம் மோஷனம்” படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தோன்ற இருக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு காசர்கோடு சீமேனியில் அரங்குகள் அமைத்து நடத்தி வந்தனர். அந்த அரங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு, அங்கு போடப்பட்ட முழு செட்டும் எரிந்து நாசமானது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும் இந்த விபத்தினால் பல லட்சம் மதிப்பு நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here