நடிகர் ரஜினிகாந்துக்கு கோரிக்கை வைத்து பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார் ப்ரேமம் பட இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன்.

தொடர்ந்து வெற்றி

2013 ஆம் ஆண்டு நேரம் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்ரன். இந்த படத்தில் நிவின் பாலி, நஸ்ரியா, பாபி சின்ஹா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். மலையாளம் மற்றும் தமிழில் வெளியான இந்த படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறவில்லை. அதன்பிறகு 2015 ஆம் ஆண்டு இவர் இயக்கிய பிரேமம் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் பெற்றது. இந்த படத்திலும் நிவின் பாலி ஹீரோவாக நடித்திருந்தார். நடிகை சாய் பல்லவி, அனுப்பமா பரமேஸ்வரன், மடோனா செபஸ்டியன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

மலர் டீச்சர்

சாய் பல்லவி நடித்திருந்த மலர் டீச்சர் கதாபாத்திரம் அவரது திரைவாழ்க்கைக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. பிரேமம் படத்தின் வெற்றிக்குப் பிறகு தெலுங்கு, மலையாளம் என்று பல மொழிகளிலும் நடிக்க துவங்கினார் நடிகை சாய் பல்லவி. கடந்த ஆண்டு நயன்தாரா நடிப்பில் கோல்ட் திரைப்படத்தையும் இயக்கி தற்போது மலையாளத்தில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.

கோரிக்கை வைத்த இயக்குநர்

இந்நிலையில் இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அவர் குறிப்பிட்டுள்ள பதிவில், “அடிக்கடி உங்கள் மனதில் தோன்றிய கருத்துக்களை வீடியோவாக வெளியிடுங்கள். நீங்கள் என்ன சொன்னாலும் அதைக் கேட்க ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள். உங்கள் கருத்துக்கள் வரவேற்பை பெறும்” என்று கூறியுள்ளார். தற்போது இந்த பதிவு சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here