நோ என்ட்ரி என்ற திரில்லர் படத்தில் நடித்துள்ள நடிகை ஆண்ட்ரியா அந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணியில் ஈடுபட்டுள்ளார்.

முன்னணி நடிகை

கண்ட நாள் முதல் என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த ஆண்ட்ரியாவுக்கு, பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆகும் வாய்ப்பு கிடைத்தது. இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சரத்குமார், ஜோதிகா நடித்த இந்த திரைப்படத்தில், ஆண்ட்ரியா தனது அபார நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். முன்னணி கதாபாத்திரத்தில் இவர் நடித்த முதல் படமே சூப்பர்ஹிட் ஆனதும், அடுத்தடுத்து வாய்ப்புகள் இவரை தேடி வந்தது. ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம் போன்ற ஹிட் படங்களை கொடுத்து வந்தார் நடிகை ஆண்ட்ரியா. தரமணி, வடசென்னை போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகையாக முத்திரை பதித்துக் கொண்டார்.

திரில்லர் படம்

தற்போது ஆண்ட்ரியா நடிப்பில் பல படங்கள் வெளிவர தயாராக உள்ளது. அதில் பிசாசு 2 திரைப்படமும், கா, மாளிகை போன்ற திரைப்படங்கள் படப்பிடிப்புகள் முடிந்து வெளிவரும் கட்டத்தில் உள்ளது. அதன்பிறகு, பாபி சிம்ஹாவுடன் ஒரு படமும், தினேஷ் செல்வராஜ் இயக்கும் படத்திலும் நடித்து வரும் ஆன்ட்ரியா, “நோ என்ட்ரி” படத்தின் போஸ்ட் ப்ரடக்ஷன் பணியில் தீவிரமாக காட்டி வருகிறார். நோ என்ட்ரி படத்தில் ஆண்ட்ரியா உடன் இணைந்து பிரதாப் போத்தன், ரம்யா ராவ், ஆதவ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அழகு கார்த்திக் இயக்கும் இந்த திரைப்படம் திரில்லர் கதை அம்சம் உள்ள படமாக உருவாகியுள்ளது. ஒரு காட்டுக்குள் ராணுவத்திற்காக ஆராய்ச்சி செய்ய போன தனது தந்தையை தேடி போகிறார் ஆண்ட்ரியா. அதேபோல் வேறு காரணங்களுக்காக டூரிஸ்ட் ஆகவும் சிலர் அந்த காட்டுக்குள் வருகின்றனர். அங்கு இருக்கும் காட்டு நாய்களிடம் சிக்கிக் கொள்ளும் அவர்கள் எப்படி பிழைத்தார்கள் என்பதை ஹாரர் திரில்லர் படமாக உருவாகி இருக்கின்றனர். இந்த திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here