தவறாக பேசிய ரசிகருக்கு தனது ஸ்டைலில் ரிப்ளை கொடுத்துள்ளார் நடிகை யாஷிகா ஆனந்த்.

பிக் பாஸ் யாஷிகா

இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். பிக் பாஸ் சீசன் 2இல் பங்கேற்றார். 98-வது நாளில் 5 லட்ச ரூபாய் பரிசு தொகையுடன் வெளியேறிய நடிகை யாஷிகா ஆனந்த், தமிழில் நோட்டா, ஜாம்பி, பெஸ்டி, கடமையை செய் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமூகவலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய யாஷிகா ஆனந்த், அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வருவார்.

அதிரடி பதில்

சமீபத்தில் ஈசிஆர் ரோட்டில் ஏற்பட்ட விபத்தில் தனது தோழியை இழந்தார். நீண்ட நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த யாஷிகா ஆனந்த் தீவிர சிகிச்சைக்கு பிறகு உடல் நலம் பெற்று வீடு திரும்பினார். அதன் பிறகும் கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வந்த நடிகை யாஷிகா ஆனந்துக்கு, ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருவார்கள். சமீபத்தில் சமூக வலைதளத்தில் ரசிகர்களுடன் உரையாடினார் யாஷிகா ஆனந்த். அப்பொழுது நடந்த உரையாடலின் போது, “உங்களின் மோசமான வீடியோவை நான் பார்த்து இருக்கிறேன் என்று ரசிகர் ஒருவர் கூறினார். உடனே யாஷிகா சிறிதும் தயங்காமல், அப்படியா அதை எனக்கும் அனுப்புங்கள் அந்த வீடியோவில் நடித்தது பேயாக இருக்கும். இல்லையென்றால் உங்கள் கண்ணில் பிரச்சனை இருக்கும்” என்று பதில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here