நடிகை சாய் பல்லவி ஹிந்தியில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

பாலிவுட் படங்கள்

சமீப காலமாகவே தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர்கள் ஹிந்தியில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் ஸ்ருதிஹாசன் ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். நடிகை சமந்தாவுக்கும் ஃபேமிலி மேன் 2 வெப் தொடருக்கு பிறகு ஹிந்தி பட வாய்ப்புகள் அதிகமாக வருகின்றன. ஹிந்தியில் நடிப்பதற்கு முன்னணி இயக்குநர்களுடன் கதை கேட்டு வருவதாகவும் விரைவில் அவர் நடிக்கக்கூடிய படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகின்றது. நடிகை நயன்தாராவும் அட்லீ இயக்கத்தில் தயாராகி வரும் ஜவான் திரைப்படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகம் ஆகிறார். இப்படத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்கிறார். அந்த வரிசையில் தற்போது சாய் பல்லவிக்கும் பாலிவுட்டில் இருந்து அழைப்பு வந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஹிந்தியில் சாய் பல்லவி

ராமாயண கதையை மையமாக வைத்து புதிய படம் தயாராக உள்ளதாகவும், அதில் ராமராக ரன்பீர் கபூர் நடிக்க உள்ளதாகவும் கூறுகின்றனர். மேலும் ராவணனாக ரித்திக் ரோஷன் நடிக்கப் போகிறார் என்றும் கூறுகின்றனர். இப்படத்தில் நடிகை சாய் பல்லவியை சீதாவாக நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாக தெரிகிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என்று பான் இந்தியா படமாக வெளியாக உள்ளதாகவும் கூறுகின்றனர். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை சாய் பல்லவி சமீபத்தில் புஷ்பா 2 படத்திலும் இணைந்துள்ளார். தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வரும் நடிகை சாய் பல்லவி, செலக்ட்டிவான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் புஷ்பா 2 படத்திலும், ஹிந்தி படத்திலும் அவரது கதாபாத்திரம் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து தமிழிலும் ஒரு படம் நடித்து வருகிறார் நடிகை சாய் பல்லவி. கடந்த ஆண்டு அவரது நடிப்பில் வெளியான கார்கி திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here