திமுக ஆட்சியை அகற்றுவதற்காக கலவரத்தை ஏற்படுத்த முயற்சி நடப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

கருணாநிதி சிலை திறப்பு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த ஒழுகினசேரியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது. வெண்கலத்தாலான இச்சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், நாட்டை பிளவுபடுத்த சிலர் முயற்சித்து வருவதாக குற்றம்சாட்டினார்.

பரபரப்பு குற்றச்சாட்டு

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்; “சாதி கலவரம், மதக் கலவரத்தை தூண்டலாமா என சிலர் முயற்சி செய்து வருகின்றனர். திமுக ஆட்சியை அகற்றுவதற்காக கலவரத்தை ஏற்படுத்த சிலர் முயற்சித்து வருகிறார்கள். மக்களிடம் பிளவுகளை ஏற்படுத்தலாமா என சிலர் திட்டமிட்டு காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களை விளம்பரப்படுத்த அவர்கள் நம் மீது விமர்சனத்தை வைக்கின்றனர்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here