புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், அதில் நடிகை சாய் பல்லவியும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மெகா ஹிட்

சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் புஷ்பா. இந்த படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாஸில் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்த இந்த திரைப்படம், பிளாக்பஸ்டர் ஹிட் பெற்றது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனதும் குறிப்பிடத்தக்கது. ரூ.250 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட புஷ்பா திரைப்படம் ரூ.375 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனையும் படைத்தது. இந்த படத்தில் இடம்பெற்று இருந்த “சாமி சாமி” மற்றும் “ஸ்ரீவல்லி” பாடல்கள் ராஷ்மிகா நடிப்பில் ஹிட்டானது என்றால், சமந்தாவின் கவர்ச்சி நடனத்தில் “ஒ சொல்றியா மாமா” பாடல் பட்டி தொட்டி எங்கும் பரவி ஹிட் ஆனது.

இணைந்த நடிகை

தெலுங்கு, மலையாளம், தமிழ், கன்னடம், இந்தி என பான் இந்தியா படமாக வெளியான புஷ்பா திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, அதன் இரண்டாம் பாகத்தை இயக்குவதில் பிஸியாக இருக்கிறார் இயக்குநர். இந்த படத்திலும் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாஸில் இணைந்து நடித்து வருகின்றனர். விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பில், சமீபத்தில் சாய் பல்லவியும் இணைந்து இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நடிக்கும் நடிகை சாய் பல்லவி, இந்த படத்தில் இணைந்திருப்பதால் இந்த படத்தில் கண்டிப்பாக இவருக்கு ஒரு முக்கியமான மற்றும் அழுத்தமான கதாபாத்திரம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இது மட்டும் இல்லாமல் தற்போது ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here