இயக்குநர்கள் ஷியாம் மற்றும் ப்ரவீன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மெமரீஸ்’. இந்த படத்தில் வெற்றி கதாநாயகனாகவும், பார்வதி அருண் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இப்படம் தொடர்பாக நடிகர் வெற்றி நமது LITTLE TALKS யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்திருந்தார். அந்த பேட்டியில் வெற்றி கூறியதாவது; “எட்டு தோட்டாக்கள் முடிந்த உடனே இந்த கதையை என்னிடம் சொன்னார்கள். 2 வருடத்தில் பேசிக்கொண்டே இருந்தோம். அந்த நேரத்தில் வேறு ஹீரோவை வைத்துப் பண்ணுங்கள் என்று சொன்னேன். ஆனால் நான் தான் வேண்டும் என வெயிட் பண்ணி இந்தப்படம் எடுத்துள்ளார்கள். என்னை நம்பியதற்காக இயக்குநர்களுக்கு நன்றி. அடர்ந்த காட்டுக்குள் கஷ்டப்பட்டு படம்பிடித்துள்ளோம். எனக்கு இதில் 4 தோற்றங்கள். படம் நன்றாக வந்துள்ளது, பார்த்து உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி” என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here