கதாநாயகிகளுக்கு முக்கியதுவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகை ஜோதிகா ஹிந்தி வெப் தொடரில் நடிப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

பெண்களுக்கு முக்கியத்துவம்

அறிமுகம் தேவை இல்லாத நடிகைகளின் லிஸ்டில் நடிகை ஜோதிகாவும் ஒருவர். ஆரம்ப காலத்தில் இருந்து தனது ரியாக்ஷனை கொண்டு பல ரசிகர்களை தன் கைவசம் வைத்துள்ளவர். திருமணத்திற்கு பிறகு சில வருடங்கள் நடிப்புக்கு பிரேக் கொடுத்திருந்த நடிகை ஜோதிகா, 2015 ஆம் ஆண்டு வெளியான ’36 வயதினிலே’ படத்தின் மூலம் மீண்டும் நடிக்க துவங்கினார். திருமணத்திற்குப் பிறகு பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வரும் ஜோதிகா, நாச்சியார், மகளிர் மட்டும், ராட்சசி, ஜாக்பாட், பொன்மகள் வந்தால் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார். தற்போது மலையாளத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக ‘காதல் – தி கோர்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். ஜியோ பேபி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்கு, மிகுந்த ஆவல் நிலவி வருகிறது. இது மட்டும் இல்லாமல் ஹிந்தியில் ‘ஸ்ரீ’ என்ற படத்தில் ராஜ்குமார் ராவுடன் நடிக்கிறார்.

வெப் தொடரில் ஜோ

அடுத்தடுத்து படங்களில் பிஸியாக இருந்து வரும் நடிகை ஜோதிகா, தற்போது வெப் தொடரில் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. ‘தாபா கார்டல்’ என்ற பெயரில் உருவாகி வரும் ஹிந்தி வெப் தொடரில் நடிக்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக கூறுகின்றனர். இந்த வெப் தொடர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதில் ஜோதிகாவுடன் ஷபானா ஆஸ்மி, சுஜ்ராஜ் ராவ் ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த வெப் தொடரை இயக்குகிறார் இயக்குநர் சோனாலி போஸ். ஐந்து குடும்பப் பெண்களை மையமாக வைத்து இந்த தொடர் உருவாக்கப்படுகின்றது. படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதால், ஜோதிகா மும்பையில் உள்ள தங்களது பூர்வீக வீட்டில் தங்கி உள்ளார் என்ற தகவலும் வெளிவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here