சின்னத்திரை நடிகர்களான விஷ்ணுகாந்த், சம்யுக்தா இருவரும் திருமணம் செய்து கொண்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

சீரியல் பிரபலங்கள்

சின்னத்திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சம்யுக்தா. 2021 ஆண்டு யூடியூப்பில் வெளியான நிறைமாத நிலவே என்ற தொடரின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களை உருவாக்கி கொண்டார். இந்த வெற்றி இவரை சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுக்க உதவியது. விஜய் டிவி ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட்டான பாவம் கணேசன், அன்புடன் குஷி, சிப்பிக்குள் முத்து உள்ளிட்ட தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் சம்யுக்தா. சமூக வலைத்தளத்தில் அடிக்கடி தனது போட்டோஷூட் புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வரும் நடிகை சம்யுக்தா, சமீபத்தில் சிப்பிக்குள் முத்து தொடரில் தன்னுடன் நடித்த பிரபல நடிகரான விஷ்ணுகாந்தை காதலிப்பதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

காதல் திருமணம்

பல தொடர்களில் நடித்து பிரபலமானவர் சின்னத்திரை நடிகர் விஷ்ணுகாந்த், ஜீ தமிழில் ரஜினி என்ற தொடரிலும், கோகுலத்தில் சீதை என்ற தொடரிலும் நடித்திருந்தார். சமீபத்தில் நடிகை சம்யுக்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் விஷ்ணுகாந்தை டேக் செய்து திருமண புகைப்படத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது; “எல்லா குழப்பங்களுக்கும் நடுவில் நான் உன்னை கண்டேன். நீங்கள் உண்மையிலேயே என் புன்னகை அளவு என் வாழ்வின் அனைத்து துன்பங்களையும் மகிழ்ச்சியாக மாற்றியவர். நான் உங்களுடன் இருக்கும் பொழுது என்னை நன்றாக உணர்கிறேன். என் வாழ்க்கையில் வந்ததற்காக மிக்க நன்றி. இந்த பிறந்த நாளிலிருந்து உங்களுடன் என் வாழ்க்கை பயணம் மிகவும் அழகாக இருக்கும்” என்று பதிவிட்டுள்ளார். கடந்த மூன்றாம் தேதி நடைபெற்ற அவர்களின் திருமண புகைப்படத்தையும் சம்யுக்தா வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவர்களுக் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here