பாக்கியலட்சுமி தொடரில் இருந்து கோபி கதாபாத்திரத்தில் நடிக்கும் சதீஷ் விலகப்போவதாக தகவல் வந்துள்ளது.

முன்னணி தொடர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்களுக்கு மத்தியில் பாக்கியலட்சுமி தொடர் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. இந்த தொடர் பாக்கியா, கோபி, ராதிகா உள்ளிட்ட முன்னணி கதாபாத்திரங்களை கொண்டு ஒளிபரப்பாகி வருகின்றது. எப்போதும் சமையல் செய்துகொண்டு உலக அறிவே இல்லாத பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு நீண்ட வருடம் காதலியாக இருக்கும் ராதிகாவை திருமணம் செய்து கொள்கிறார் கோபி. அதற்குப் பிறகு பல போராட்டங்களைக் கடந்து சாதனைகளை செய்து வருகிறார் பாக்கியா. அதுமட்டும் இல்லாமல் தனது குடும்பத்தை தனி ஆளாக நின்று காப்பாற்றியும் வருகிறார்.

உதவும் ரஞ்சித்

சமீபத்தில், ஆங்கிலம் பேச தெரியாத பாக்கியாவை ராதிகா கேவலமாக பேச, ஆங்கிலம் கற்றுக்கொள்ளும் முயற்சியில் இறங்குகிறார் பாக்கியா. இந்த இடத்தில் பாக்கியாவிற்கு உறுதுணையாக இருக்க ஒரு முக்கியமான கேரக்டர் தேவைப்படுகிறது என்பதால், பிரபல நடிகரை இந்த தொடர் அறிமுகப்படுத்தியது. இது தொடரில் புதிய வரவாக பழனிசாமி என்ற கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார் நடிகர் ரஞ்சித். இவரது கதாபாத்திரம் முக்கியமான ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதுமட்டும் இல்லாமல் பாக்கியாவிற்கு உதவி செய்யும் கதாபாத்திரமாகவும் இருப்பதால், இந்த கேரக்டர் அதிகமாக காணப்படும் என்றும் தோன்றுகிறது. அதனால் கோபி கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் குறையும் என்று ரசிகர்கள் நினைத்த நிலையில், கோபி சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கோபி வீடியோ

அந்த வீடியோவில் பாக்கியலட்சுமி சீரியல் ப்ரோமோவை அனைவரும் பார்த்திருப்பீர்கள். நீங்கள் காட்டும் அன்புக்கு நன்றி. இப்போது சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள ரஞ்சித் சாருக்கு அதே அன்பு காட்டுவீர்கள் என்று நம்புகிறேன். இந்த தொடரில் கோபியின் கதாபாத்திரம் குறையவிருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகள் உங்களுடன் பயணித்துள்ளேன். வயதாகிவிட்டது கொஞ்ச நாள் ஓய்வெடுக்க உள்ளேன் என்று கூறினார். இதனால் இனி கோபி சீரியலில் அதிகம் வரமாட்டார் எனக் கூறும் ரசிகர்களுக்கு இந்த தகவல் அதிர்ச்சியாக தான் இருக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here