தனது தந்தையால் பாலியல் கொடுமையை அனுபவித்ததாக நடிகை குஷ்பு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

ரசிகர் பட்டாளம்

1990களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. அப்போதிலிருந்தே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும், தனக்கென ஒரு கௌரவத்தையும் ஏற்படுத்தி நடிகையாக மட்டுமல்லாமல், அரசியலிலும் சாதித்து வருகிறார். பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தும், தற்போதிருக்கும் ஹீரோக்களுடனும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை குஷ்பு, சமூகத்தில் ஏற்படும் பிரச்சனைகளையும், பெண்கள் மற்று குழந்தைகளுக்கு ஏற்படும் துன்புறுத்தல்களையும் தைரியமாக பேசி பதிவிடுகிறார்.

அதிர்ச்சி தகவல்

நடிகை குஷ்பு சமீபத்தில் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து டெல்லி சென்று அவர் ஆணையத்தின் உறுப்பினராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். டெல்லியில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு நடிகை குஷ்பு பேட்டியளித்தார். அப்போது அவர் அதிர்ச்சிகரமான தகவலைப் பகிர்ந்திருக்கிறார்; “பாலியல் ரீதியாக ஒரு குழந்தை துன்புறுத்தப்படும்போது அது அந்தக் குழந்தையின் வாழ்நாள் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தும். என்னுடைய அம்மா ஒரு மோசமான நபரைத் திருமணம் செய்து கொண்டார். என் அப்பா என் அம்மாவை அடிப்பதையும், தன் ஒரே மகளான என்னையும் பாலியல் ரீதியாகத் துஷ்பிரயோகம் செய்வதையும் தனது பிறப்புரிமையாக நினைத்தார். என்னை பாலியல் ரீதியாக அவர் துன்புறுத்தியபோது எனக்கு 8 வயதுதான் ஆகியிருந்தது. 15 வயது வரை அது தொடர்ந்தது. 16 வயதில்தான் நான் அப்பாவிற்கு எதிராகப் பேசத் தொடங்கினேன், அப்பாவுக்கு எதிராகப் போராடினேன்”. இவ்வாறு குஷ்பு கூறியிருக்கிறார். தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராகப் பொறுப்பேற்றபின் குஷ்பு தனக்கு நேர்ந்த கொடுமை குறித்துப் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here