சினிமா துறையில் 18 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நடிகை தமன்னா உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வெற்றி நாயகி

2005 ஆம் ஆண்டு ஹிந்தியில் சாந்த்சா ரோஷன் ஷெஹ்ரா என்ற படத்தில் நடித்ததன் மூலம் சினிமாத்துறைக்கு அறிமுகமானார் நடிகை தம்ன்னா. கேடி என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானார். பின்னர் வியாபாரி, கல்லூரி, அயன் போன்ற பல ஹிட் படங்களை கொடுத்தார். அதிலும் இவர் நடித்த கல்லூரி திரைப்படம் மிகப்பெரிய ஹிட் பெற்றது. அதன்பிறகு முன்னணி நடிகர்களுடன் நடிக்க துவங்கினார். படிக்காதவன், அயன், பையா, சுறா போன்ற படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார். சூர்யா, விஜய், தனுஷ், கார்த்தி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த தமன்னா தற்போது ஒரு படி ஏறி சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு கன்னடம், மராட்டி என்று அனைத்து மொழியிலும் முத்திரை பதித்திருக்கும் நடிகை தமன்னா, தற்போது போலா ஷங்கர் என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

18 ஆண்டுகள் நிறைவு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து ஜெயிலர் படத்தில் நடித்து வரும் தமன்னா, அடுத்தடுத்து படங்களில் பிஸியாக இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் அரண்மனை4 படத்திலும் கமிட் ஆகி உள்ளார். இந்நிலையில் நடிகை தமன்னா சினிமா துறைக்கு வந்து 18 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்; “சினிமாவில் 18 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது மனநிறைவாக இருக்கிறது. நான் முதிர்ச்சி பெற்றுள்ளேன். ரசிகர்கள் என் மீது அதிக அன்பு செலுத்துகிறார்கள். அவர்களின் ஆதரவை வார்த்தைகளால் விவரிக்க முடியாது” எனக் கூறிப்பிட்டுள்ளார். சினிமாவில் 18 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள தமன்னாவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here