மதுரையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குறித்து ஆய்வு மேர்கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாணவ – மாணவிகளுடன் அமர்ந்து உணவருந்தினார்.

திடீர் ஆய்வு

மதுரை மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 73 அரசு பள்ளிகளில் படிக்கும் 8,702 குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை வந்திருந்த விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை 8 மணி அளவில் மதுரை நாராயணபுரத்தில் மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு சென்று காலை உணவு திட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளிகளில் காலை உணவு திட்டம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

குறைகளை கேட்ட உதயநிதி

இதனைத் தொடர்ந்து பள்ளி குழந்தைகளுடன் ஒன்றாக உட்கார்ந்து காலை உணவு அருந்திய உதயநிதி ஸ்டாலின், உணவின் தரம் குறித்து மாணவ – மாணவிகளிடம் விசாரித்தார். அப்போது அவருடன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் மாணவிகளுடன் அமர்ந்து உணவு அருந்தினார். இந்த ஆய்வின்போது மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here