தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார், தயாரிப்பாளர் ஆந்திர சட்டமன்ற உறுப்பினர் நந்தமூரி பாலகிருஷ்ணா தெலுங்கில் வெளியான வாத்தி படத்தை பாராட்டி உள்ளார்.

தெலுங்கு வாத்தி

இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா, சமுத்திரக்கனி, உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் வாத்தி. தமிழில் மட்டுமில்லாமல் பாலிவுட், ஹாலிவுட் என்று கலக்கி வந்த நடிகர் தனுஷ் வாத்தி படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமாகியுள்ளார். சார் என்ற பெயரில் தெலுங்கில் வெளியாகி இருக்கும் இந்த திரைப்படம் மூலம் தெலுங்கு ஆடியன்சையும் தன் வசப்படுத்தியுள்ளார்.

தலைவர்கள் பாராட்டு

இந்நிலையில் தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் மற்றும் தயாரிப்பாளர் ஆந்திர சட்டமன்ற உறுப்பினர் நந்தமூரி பாலகிருஷ்ணா தெலுங்கில் வெளியான வாத்தி படத்தை பார்த்து பாராட்டி உள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டிருந்தாலும், அதிக அளவில் தெலுங்கு நடிகர்களே அதில் நடித்திருந்தனர். ஏற்கனவே பல கதைகள் இதுபோல் வந்திருந்தாலும், ஆசிரியராக நடித்திருந்த தனுஷின் நடிப்பு நன்றாக பேசப்பட்டது. சுமார் 30 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், வெளியான இரண்டு நாட்களில் ஆந்திராவில் 25 கோடி ரூபாய் வரை வசூலித்தது. தமிழில் 35 கோடிகள் வரை வசூலித்து, மொத்தம் 60 கோடிகளுக்கு மேல் வசூலித்ததாக தகவல்கள் வெளியானது. கல்வி சம்பந்தப்பட்ட படம் என்றாலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த படத்திற்கு பல அரசியல் தலைவர்களும் பாராட்டையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here