கர்நாடகா மாநிலத்தில் பியூட்டி பார்லருக்கு சென்று மேக்கப் போட்டுக்கொண்ட இளம்பெண்ணின் முகம் கோரமாக மாறிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேரியுள்ளது.

மேக்கப் அப்

திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பெண் தங்களின் அழகை அதிகரிப்பதற்காக பியூட்டி பார்லர் சென்று மேக்கப் போட்டுக் கொள்வது வழக்கம். குறிப்பாக இளம்பெண்கள் மேக்கப் போடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், சில சமயங்களில் அதுவே அவர்களுக்கு அதிக பாதிப்பையும் ஏற்படுத்திவிடுகிறது.

புது விதம்

இதுபோன்ற ஒரு துயர சம்பவம் கர்நாடக மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. ஹசன் மாவட்டம் அரசிகெரேவில் வசிக்கும் 25 வயது பெண்ணுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இவர் தனது அழகை அதிகப்படுத்திக் கொள்வதற்காக, அங்குள்ள பியூட்டி பார்லருக்கு சென்றுள்ளார். அங்அப்போது அகிருந்த பியூடிஷியன் கங்கா, தங்களிடம் புது விதமான ‘ஸ்டீம் மேக்கப்’ இருப்பதாக கூறியிருக்கிறார். இதற்கு திருமணப் பெண் சம்மதித்ததும், அவருக்கு ஸ்டீம் மேக்கப் போட்டுள்ளனர்.

பரிதாபம்

அந்த மேக்கப்பால் மணப்பெண்ணுக்கு சிறிது நேரத்தில் முகத்தில் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. கண்கள் உள்ளே சென்றதுடன், முகம் முழுவதும் வீங்கியுள்ளது. இதனால் பதறிப் போன அப்பெண்ணின் குடும்பத்தார், அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது அப்பெண்ணுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, மணப்பெண்ணை பார்த்து அதிர்ச்சி அடைந்த மணமகன், அவரை திருமணம் செய்ய தயக்கம் காட்டியதால், அந்த திருமணம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here