சுந்தரி தொடரில் தன் மாமனாருக்கு இறுதி சடங்கு செய்யும் வீடியோவை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார் கேப்ரில்லா (சுந்தரி).

விறுவிறுப்பான தொடர்

சன் டிவியில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் சுந்தரி தொடர் மக்களுடைய நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. சுந்தரி தொடரில் நடிகை கேப்ரில்லா கதாநாயகியாக நடித்து வருகிறார். அதில் ஜிஷ்ணு மேனன் கார்த்திக் எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் ஸ்ரீ கோபிகா, அனு உள்ளிட்ட பலரும் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சுந்தரியின் கணவரான கார்த்திக், சுந்தரிக்கு தெரியாமல் அனுவை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்கிறார். இதுகுறித்து எதுவும் தெரியாத சுந்தரி கார்த்திக்கின் இரண்டாவது மனைவியான அனுவின் அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார். கலெக்டர் ஆக வேண்டும் என்ற கனவில் வேலை செய்து கொண்டே படிக்கவும் செய்கிறார். வெளிநாட்டிற்கு செல்லப் போவதாக கார்த்திக் சொல்லிவிட்டு இரண்டாவது மனைவியுடன் வாழ தொடங்குகிறார். இந்த விஷயம் சுந்தரிக்கு தெரிய வர கார்த்திக்கை விட்டு பிரிகிறார். அதன்பிறகு இந்த தொடர் பல திருப்பங்களை கொண்டு விறுவிறுப்பாக நகர்கிறது.

உயிர் இழந்தார்

இச்சூழலில் உடல்நிலை மோசமடைந்த ஷங்கர் (கார்த்திக்கின் அப்பா), சுந்தரி & கார்த்தியிடம் பேசி, சுந்தரியை விட்டு பிரிய மாட்டேன் என சத்தியம் செய்ய சொல்கிறார். இதற்கு சம்மதிக்காத கார்த்தி, அனு & அனு வயிற்றில் வளரும் குழந்தை தான் முக்கியம் என்கிறார். இதனால் கோபமான கார்த்தியின் தந்தை ஷங்கர் உயிரிழக்கிறார். ஷங்கர் இறந்த நிலையிலும் சுந்தரி தேர்வெழுத செல்கிறார். செல்வி, கார்த்தியை ஷங்கருக்கு இறுதிச் சடங்கு செய்யவிடாமல் தடுத்தும் விடுகிறார். இதனால் சுந்தரி இறுதிச் சடங்கு செய்ய குடும்பத்தார் முடிவு செய்கிறார்கள். தேர்வெழுத சென்ற சுந்தரி மாலைக்குள் வந்து இறுதிச்சடங்கில் கலந்து கொள்வாள் என முருகன் ஊர் மக்களிடம் கூறுகிறார். அங்கு வரும் சுந்தரி கொள்ளி குடம் சுமந்து கதறி அழுது தனது மாமனார் ஷங்கருக்கு இறுதிச் சடங்கு செய்கிறார்.

இறுதி சடங்கு

கிருஷ்ணா, கார்த்திக்கு வீடியோ கால் செய்கிறார். வீடியோவை பார்த்து கார்த்தி அழுகிறார். அனு அங்கு வந்து கார்த்திக் அழுவதை கவனிக்கிறாள். தன் தந்தையின் இறுதிச்சடங்கு முடிந்துவிட்டதாக கூற, ஷங்கர் உடலுக்கு கொள்ளி வைத்தது யார் என்று அனு விசாரிக்க, கார்த்தி பதில் சொல்ல மறுக்கிறார். கார்த்தி தொடர்ந்து கண்ணீர் விட, அனு அவருக்கு ஆறுதல் கூற முயல்கிறாள். இச்சூழலில் அனுவுக்கு பிரசவ வலி ஏற்படுகிறது. இந்த எபிசோடின் இறுதிச்சடங்கு காட்சியை மட்டும் பகிர்ந்த நடிகை கேப்ரில்லா, “கலை மக்களுக்கே”.. இன்றைய எபிசோட் எப்படி இருந்தது மக்களே”… என இன்ஸ்டாகிராம் ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த எபிசோட் கண்டிப்பாக ரசிகர்களை கண்கலங்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here