இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் சலார் படத்தில் தனது பாகத்தின் படப்பிடிப்புகள் முடிந்துவிட்டதாக நடிகை ஸ்ருதிஹாசன் அறிவித்துள்ளார்.

வெற்றி நிச்சயம்

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் சலார். இந்த படத்தில் பிரபாஸ், பிரித்விராஜ், ஸ்ருதிஹாசன், ஜெகபதிபாபு உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இவர் இயக்கிய கேஜிஎஃப் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. ஒட்டுமொத்த இந்திய திரை உலகமே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு கேஜிஎஃப் இன் வெற்றி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. இவரது அடுத்த படைப்பாக உருவாகி வரும் திரைப்படம் தான் சலார். பாகுபலி வெற்றிக்குப் பிறகு சாஹோ, ராதே ஷியாம் போன்ற படங்களில் நடித்திருந்தார் நடிகர் பிரபாஸ். ஆனால் அந்த இரண்டு படங்களும் எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லை. பிரபாஸ் நடிப்பில் தற்போது ஆதி புரூஷ் படமும் தயாராகி வருவது. இதன் டீசர் சமீபத்தில் வெளியாகி, பல சர்ச்சைகளுக்கு உள்ளானது. இதனால் தற்போது வெற்றி கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார் பிரபாஸ்.

முடிந்த படப்பிடிப்பு

பிரபாஸின் ரசிகர்கள் இந்த படமாவது அவருக்கு கை கொடுக்குமா? என்று அதிக அளவு எதிர்பார்ப்பில் உள்ளனர். சலார் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. மேலும் இந்த படத்தை பற்றிய ஒரு அப்டேட்டையும் நடிகை ஸ்ருதிஹாசன் வெளியிட்டுள்ளார். அதாவது தன்னுடைய காட்சிகள் மட்டும் படமாக்கப்பட்டு முடிந்துவிட்டதாக கூறி இயக்குநருடன் இருக்கும் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். சலார் திரைப்படம் உலகமெங்கும் செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது. சலார் படத்தில் தனது போர்ஷனை முடித்த நடிகை ஸ்ருதிஹாசன் “தி ஐ” என்ற ஆங்கில படத்தில் நடித்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here