பணிந்து நின்றுதான் பணிசெய்ய வேண்டும் என்பதில்லை துணிந்து நின்றும் பணி செய்யலாம் என்பதனை நிருபித்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் புகழாரம் சூட்டியுள்ளார்.

மலர்தூவி மரியாதை

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் 75 வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை அதிமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலைதாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதேபோல், சென்னை காமராஜர் சாலையில் உள்ள உயர்கல்வி மன்ற வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள ஜெயலலலிதாவின் சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனைதொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.

பெண் ஆளுமை

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது; “பணிந்து நின்றுதான் பணிசெய்ய வேண்டும் என்பதில்லை… துணிந்து நின்றும் பணி செய்யலாம் என்பதனை நிருபித்த பெண் ஆளுமை மரியாதைக்குரிய முன்னாள் முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களின் பிறந்த தினமான இன்று அவரது நினைவை போற்றுகிறேன்”. இவ்வாறு தமிழிசை அதில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here