நடிகை நயன்தாரா நடிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு தயாரிப்பு வேலைகளை மட்டும் முழுமையாக செய்ய போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

சொந்த தயாரிப்பு நிறுவனம்

ஐயா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை நயன்தாரா, சந்திரமுகி, கஜினி, வல்லவன், பில்லா, யாரடி நீ மோகினி, ஆதவன் என்று பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். நடிகை நயன்தாரா தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளிலும் நடித்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேல் சினிமா துறையில் இருந்து வருகிறார். லேடி சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அழைக்கப்படும் நடிகை நயன்தாரா, நடிப்பதை நிறுத்திக் கொள்ளப் போவதாகவும், தயாரிப்பு வேலைகளை மட்டும் தொடர்ந்து செய்யப் போவதாகவும், அதில் முழு கவனம் செலுத்த போவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

நடிப்புக்கு முற்றுப்புள்ளி

இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நயன்தாரா, அவருடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்த தயாரிப்பு நிறுவனம் தயாரித்த காத்து வாக்குல ரெண்டு காதல், நெற்றிக்கண், கனெக்ட், போன்ற படங்கள் நல்ல வரவேற்பு பெற்றதும் குறிப்பிடத்தக்கது. தற்போது நயன்தாரா ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. அது மட்டும் இல்லாமல் ஜெயம் ரவியுடன் இறைவன் என்ற படத்திலும், இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கும் படத்திலும், லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகி வரும் படத்திலும் நடித்து வருகிறார் நயன்தாரா. பல படங்களை தன் கைவசம் வைத்துள்ள நயன்தாரா இந்த படங்களில் படப்பிடிப்புகள் முழுவதும் முடிந்த பிறகு நடிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு தயாரிப்பு நிறுவனத்தையும், தனது இரண்டு குழந்தைகளையும் பார்த்துக் கொள்ளப் போகிறார் என்ற தகவல் நிலவி வருகிறது. ஆனால் இது சம்பந்தமான எந்த ஒரு விளக்கத்தையும் நயன்தாரா தரப்பில் இருந்து வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here