9 வருடம் ஒருவரை காதலித்து வருவதாகவும், அவரையே திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் நடிகை டாப்சி கூறியுள்ளார்.

ஹிந்தியில் முன்னணி

தெலுங்கு படத்தின் மூலம் சினிமாத்துறைக்கு அறிமுகமான நடிகை டாப்சி, ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஸுடன் இணைந்து நடித்த ஆடுகளம் திரைப்படம், இவருக்கு நல்ல அடையாளத்தை பெற்று தந்தது. அதைத்தொடர்ந்து தெலுங்கில் அதிகம் கவனம் செலுத்தி வந்த டாப்சி, ஆரம்பம், காஞ்சனா 2 போன்ற படங்களில் நடித்தார். தற்போது, ஜன கன மன, ஏலியன் போன்ற தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

அங்கீகாரம்

பாலிவுட்டில் பல ஹிட் படங்களை கொடுத்து தற்போது முன்னணி நடிகையாக இருக்கிறார். 2016 ஆம் ஆண்டு இவர் நடித்த பிங்க் திரைப்படம் ஒரு தனி அங்கீகாரத்தை பெற்று தந்தது. அமிதாப் பச்சன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. தமிழில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரசிகர்களுடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தியில் அமிதாப்பச்சன் நடித்திருந்த முதன்மை கதாபாத்திரத்தில் நடிகர் அஜித் குமார் நடித்திருந்ததும், டாப்சியின் கதாபாத்திரத்தில் ஸ்ரதா ஸ்ரீநாத் நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

காதல் திருமணம்

சமீபத்தில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய நடிகை டாப்சியிடம் திருமணம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த நடிகை டாப்சி, “சினிமாவில் எனக்கென்று எந்த போட்டியும் இல்லை, அதனால் வாழ்க்கை சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. கடந்த 9 ஆண்டுகளாக ஒருவரை காதலித்து வருகிறேன். அவரை தான் திருமணம் செய்ய உள்ளேன். ஆனால் எப்போது என்று இன்னும் முடிவு செய்யவில்லை. தற்போது என்னுடைய முழு கவனமும் சினிமாவில் இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here