நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் ரிலீசாக இருப்பதால் அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

லிஸ்டில் பல படங்கள்

நடிகர் ஜெயம் ரவி தற்போது இயக்குநர் அஹமது இயக்கத்தில் உருவாகி வரும் இறைவன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இந்த படத்தை தொடர்ந்து இவரது நடிப்பில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் வெளிவர தயாராக உள்ளது. இயக்குநர் கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வரும் அகிலன் திரைப்படம் வருகின்ற மார்ச் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த அப்டேட், போஸ்டருடன் நேற்று வெளியானது. அகிலன் படத்தை தொடர்ந்து இவரது நடிப்பில், இயக்குநர் மணிரத்தினம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

எதிர்பார்ப்பில் PS-2

கடைசியாக ஜெயம் ரவி நடிப்பில் பொன்னியின் செல்வன் 1 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கும் எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது. இறைவன், அகிலன், PS-2 என அடுத்தடுத்து படங்களில் ஜெயம் ரவி பிஸியாக இருக்கிறார். மார்ச் 10 ஆம் தேதி அகிலன் திரைப்படமும், ஏப்ரல் 28 பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் அடுத்தடுத்து வெளிவர இருப்பதால் ஜெயம் ரவி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் தற்போது இவர் நடித்து வரும் இறைவன் திரைப்படமும் விரைவில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதனைத்தொடர்ந்து ஜெயம் ரவி சைரன் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here