பதான் படத்தின் ஹிட் காரணமாக நடிகை தீபிகா படுகோன் தனது சம்பளத்தை அதிரடியாய் உயர்த்தியுள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

வசூல் வேட்டை

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கக்கூடியவர் நடிகை தீபிகா படுகோன். பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ள தீபிகா படுகோன், தற்போது தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பதான் திரைப்படம் ரூ.1000 கோடிகளுக்கு மேல் வசூலித்ததாக கூறப்பட்டது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது சம்பளத்தை தீபிகா படுகோன் உயர்த்தியதாக தகவல்கள் கசிந்து வருகின்றது. சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், ஜான் ஆபிரஹாம் உள்ளிட்ட பலரும் நடித்த பதான் திரைப்படம் உலக அளவில் வசூலில் சாதனை படைத்து வருகின்றது.

சம்பளம் உயர்வு

தற்போது தெலுங்கு டைரக்டரான நாக் அஸ்வின் இயக்கி வரும் புதிய படத்தில் நடிக்கும் தீபிகா படுகோனுக்கு ரூ.18 கோடி சம்பளம் வழங்கப்பட்டு இருப்பதாக கூறுகின்றனர். இதன் மூலம் இந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக மாறி இருக்கிறார் நடிகை தீபிகா. இதை படத்தில் அமிதாப்பச்சன், பிரபாஸ், தீஷா பதானி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். சுமார் ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் அந்த படம், ரசிகர்களின் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோடியில் சம்பளம்!

தீபிகா படுகோன் மட்டுமல்லாமல் அவரைப்போல பல முன்னணி நடிகைகளும் தங்களது சம்பளத்தை உயர்த்தி இருப்பதாக கூறுகின்றனர். ஆலியா பட் தன் சம்பளத்தை ரூ.5 கோடியாகவும், ஆதிபுருஷ் படத்தில் சீதையாக நடிக்க கீரித்தி சனோனுக்கு ரூ.5 கோடியும், ராம் சரணை வைத்து ஷங்கர் இயக்கி வரும் படத்திற்கு நாயகியாக நடிக்கும் கியாரா அத்வானிக்கு ரூ.4 கோடி சம்பளமும் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கொரட்டல சிவா இயக்கும் தெலுங்கு படத்தில் ஜூனியர் என்டிஆர்க்கு ஜோடியாக நடிக்க ஜான்வி கபூருக்கும் ரூ.4 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here