நடிகை அனுஷகாவிற்கு அரிய வகை நோய் இருப்பதாக வெளியான தகவல் குறித்து அவரது நண்பர்கள் விளக்கமளித்துள்ளனர்.

சைலண்டான அனுஷ்கா

2006 ஆம் ஆண்டு ரெண்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. தெலுங்கு படங்களில் நடிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வரும் நடிகை அனுஷ்கா செட்டி, வேட்டைக்காரன் படத்தின் மூலம் மூன்று வருடங்களுக்குப் பிறகு தமிழ் படத்தில் நடித்தார். அதன்பிறகு சிங்கம், வானம், தெய்வத்திருமகள், சகுனி போன்ற பல படங்களில் நடித்தார். தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கக்கூடிய அனுஷ்கா, “பாகுபலி” படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் வசப்படுத்தினார். இவர் நடித்த தேவசேனா கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. முன்னணி நடிகையாக இருந்த அனுஷ்கா கடந்த இரண்டு வருடங்களாக சைலண்டாகவே இருந்து வருகிறார்.

நண்பர்கள் விளக்கம்

35 வயதாகும் நடிகை அனுஷ்கா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமலேயே இருக்கிறார். இந்நிலையில், நடிகை அனுஷ்காவிற்கு அரிய வகை நோய் உள்ளதாக தகவல் பரவி வருகிறது. அதாவது, இவருக்கு அரிதான சிரிக்கும் நோய் உள்ளது என்றும் இவர் சிரிக்க ஆரம்பித்தால் 15 முதல் 20 நிமிடங்கள் தொடர்ந்து சிரித்துக் கொண்டே இருப்பார் என்றும் அனுஷ்கா பேட்டியில் தெரிவித்ததாக செய்திகள் வெளியானது. ஆனால் இந்த தகவலில் உண்மை இல்லை என்று அவரது நெருங்கிய நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here