சன் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டவர் இல்லம் தொடர் 1000 எபிசோடுகளை கடந்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

1000 எபிசோட்

சன் டிவியில் 2019 ஆம் ஆண்டு துவங்கிய பாண்டவர் இல்லம் தொடர் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கின்றது. இந்தத் தொடரில் பாப்ரி கோஷ், ஆர்த்தி சுபாஷ், கிருத்திகா அண்ணாமலை மற்றும் நரேஷ் ஈஸ்வர், குகன் சண்முகம், நேசன் நெப்போலியன், சுரேந்தர் ராஜ், முகமது, அனிஷா, அனு சுலசாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

பெருமையா இருக்கு

பாண்டவர் இல்லம் தொடர் தற்போது 1000 எபிசோடுகளை கடந்துள்ளது. அதனால், இந்த தொடரில் நடிக்கும் நடிகர், நடிகைகள் உற்சாகத்தில் உள்ளனர். இந்த வெற்றி குறித்து, இயக்குநர் செல்வம் சுப்பையா கூறுகையில், “பாண்டவர் இல்லம் தொடர் புதிய மைல்கல்லை எட்டியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த சீரியலின் முழு ‘பயணம்’ என் கேரியருக்கு உயிர் கொடுத்தது” என்றார். இதுகுறித்து நடிகர் நரேஷ் ஈஸ்வர் மகிழ்ச்சி தெரிவித்தத்துடன், இயக்குநர் செல்வம் சுப்பையாவுடன் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மிக்க நன்றி, மேலும் பாண்டவர் இல்லத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் பாக்கியம் பெற்றுள்ளேன் என்று கூறியுள்ளார். பாண்டவர் இல்லம் தொடரின் வெற்றிக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here