தென்றல் வந்து என்னை தொடும் தொடரின் நாயகி பவித்ரா ஜனனி ஆன்மீக சுற்றுலா சென்ற புகைப்படங்கள் பார்த்த நெட்சன்ஸ் அவரை கலாய்த்து வருகின்றனர்.

பிடித்த ஜோடி

ஆபீஸ் என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான நடிகை பவித்ரா ஜனனி தற்போது தென்றல் வந்து என்னை தொடும் தொடரில் அபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தத் தொடரில் வெற்றி மற்றும் அபியின் ஜோடி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஜோடியாகும். தென்றல் வந்து என்னை தொடும் தொடர் பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. செய்யாத தவறை ஏற்றுக் கொள்ளும் வெற்றி 6 ஆண்டுகளாக சிறையில் கழிக்கிறார். சிறையில் இருந்து வெளியே வரும் வெற்றி ரவுடியாக மாற, வெளியே இருக்கும் அபி விரக்தியில் ஊருக்கு சென்று கலெக்டராக மாறுகிறார். அடுத்தடுத்து பல திருப்பங்களுடன் இருக்கும் இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நடிகை அனுஷ்கா இந்த தொடரை பாராட்டி பதிவிட்டதும் குறிப்பிடத்தக்கது.

ஆன்மீக சுற்றுலா

சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய பவித்ரா ஜனனி அடிக்கடி தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களிடம் டச்சில் உள்ளார். அந்த வகையில் தற்போது இவர் தனது நண்பர்களுடன் சதுரகரி மலைக்கு சென்றுள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சோசியல் மீடியாக்களில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here