தமிழ் படத்தில் நடித்த போது தன்னிடம் தவறாக நடந்து கொண்டவரை பற்றி நடிகை அஞ்சலி நாயர் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குணச்சித்திர நடிகை

மலையாள படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை அஞ்சலி நாயர், தமிழில் உன்னையே காதலிப்பேன், அண்ணாத்த, மாமனிதன் போன்ற படங்களில் நடித்துள்ளார். அனீஸ் என்ற இயக்குநரை திருமணம் செய்துகொண்ட அஞ்சலி நாயர், கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்தும் செய்தார். பிறகு அஜித் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு குழந்தையும் உள்ளது.

கசப்பான அனுபவம்

சமீபத்தில் நடிகை அஞ்சலி நாயர் சினிமா துறையில் தான் சந்தித்த கசப்பான அனுபவங்கள் குறித்து கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறி இருப்பதாவது; கேரளாவை சேர்ந்தவராக இருந்தாலும் எனக்கு நன்றாக தமிழ் பேச தெரியும். தமிழ் படங்களில் நடிக்க அதிகம் ஆர்வம் உண்டு. நான் தமிழில் நடித்த பொழுது வில்லன் நடிகர் ஒருவர் என்னிடம் தவறாக நடக்க முயன்றார். ஷூட்டிங் இல்லாத சமயத்தில் என்னை வெளியே வர சொல்வதும், எங்கே வெளியே சென்றாலும் என்னை பின்தொடர்ந்து வருவதுமாக இருந்தார். ஒருமுறை என்னை ரயிலில் இருந்து தள்ளிவிடவும் முயற்சி செய்தார். என் ஹேண்ட் பேக்கை எடுத்துக் கொண்டு சென்ற அவர், தன் வீட்டிற்கு வந்து வாங்கிக் கொள்ளுமாறு சொன்னார். இப்படி தொடர்ந்து அவர் டார்ச்சர் செய்ததால் நான் காவல்துறையின் உதவியை நாடினேன். மேலும் இந்த டார்ச்சர் தாங்க முடியாமல் நான் கேரளாவுக்கே திரும்பிவிட்டேன்” என்று அஞ்சலி நாயர் கூறியுள்ளார். அந்த வில்லன் நடிகர் யார் என்ற தகவலை அவர் குறிப்பிடாமலேயே, தான் சந்தித்த கசப்பான அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here