இன்று பிறந்தநாளை கொண்டாடி வரும் நடிகை மீரா ஜாஸ்மினுக்கு பிரபலங்களும், ரசிகர்களும் சோஷியல் மீடியாக்களில் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

வாலு பொண்ணு மீரா

2002 ஆம் ஆண்டு மாதவன் நடிப்பில் வெளியான ரன் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் மீரா ஜாஸ்மின். தனது முதல் படத்திலேயே மிகப்பெரிய ஹிட் கொடுத்தார் மீரா. அடுத்து இவர் நடித்த பாலா, புதிய கீதை, ஆஞ்சநேயா, ஜூட் என்று அடுத்தடுத்து பல படங்கள் அனைத்தும் தோல்வியடைந்தது. அதன்பிறகு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஆயுத எழுத்து படத்தின் மூலமாகவும், சண்டகோழி படத்தின் மூலமாகவும் தனது நடிப்பை மீண்டும் வெளிப்படுத்தினார் மீரா ஜாஸ்மின்.

அன்பு கட்டளை

தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் நடித்து வந்த நடிகை மீரா ஜாஸ்மின் பல ஆண்டுகளுக்குப் பிறகு சோசியல் மீடியாக்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு தமிழ் ரசிகர்களிடம் மீண்டும் பிரபலமானார். மிகவும் ஹோமிலியாகவும், துறுதுறு நடிப்பாலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த மீரா ஜாஸ்மின், சமீபத்தில் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் வேற லெவல் கவர்ச்சியாக இருந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்கள் மத்தியில் இவரது பேச்சுக்களும், புகைப்படங்களும் வைரலாகி கொண்டு வருகிறது. இன்னும் அதே அழகுடன் இருக்கும் மீரா ஜாஸ்மினுக்கு இன்று பிறந்தநாள் என்று தெரிந்தவுடன் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அவருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். மேலும், தமிழில் மீண்டும் நடிக்க வருமாறு அன்புக்கட்டளையும் போட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here