பலமுறை தள்ளிப் போன சமந்தாவின் சாகுந்தலம் திரைப்படம் வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

வெளிவந்த அறிவிப்பு

சமந்தா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாகுந்தலம் திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகப் போவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் மலையாள நடிகர் தேவ் மேனன் மற்றும் சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை இயக்கியவர் குணசேகர். மணிஷர்மா இசையமைத்துள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது.

முடிவுக்கு வந்தது

பலமுறை சாகுந்தலம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்ட பட குழு, படத்தின் வெளியீட்டு தேதியை மாற்றிக் கொண்டே இருந்தது. சமீபத்தில் பிப்ரவரி 17ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்த நிலையில், தற்போது அந்த தேதியையும் மாற்றியது. ரிலீஸ் தேதியை மாற்றிக் கொண்டே இருக்கும் நிலையில், இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகரித்துக் கொண்டே இருந்தது. தற்போது ஒரு வழியாக முடிவுக்கு வந்த படக்குழு ஏப்ரல் 14ஆம் தேதி திரையரங்குகளில் இப்படத்தை வெளியிடப் போவதாக அதிகாரப்பூர்வ தகவல்களை போஸ்டருடன் வெளியிட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற ஐந்து மொழிகளில் வெளியாகப்போகும் இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

தமிழில் நடிப்பாரா?

கடைசியாக சமந்தா நடிப்பில் காத்துவாக்குல ரெண்டு காதல், யசோதா போன்ற படங்கள் வெளியானது. அதில் யசோதா திரைப்படம் OTTயில் வெளியானது. அதனால் சமந்தா நடித்திருக்கும் சாகுந்தலம் திரைப்படத்தை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது சமந்தா, விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி என்ற படத்தில் நடித்து வருகிறார். பாலிவுடில் வெப் தொடர்களிலும் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். இதனால் மும்பையில் பல கோடியில் வீடும் வாங்கி உள்ளார் சமந்தா. சாகுந்தலம் திரைப்படத்திற்கு பிறகு சமந்தா தமிழில் நடிப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here