இளம் நடிகை ராஷ்மிகா மந்தனா பல கோடி ரூபாய் மதிப்பில் 5 பங்களாக்கள் வாங்கியிருப்பதாக வெளியான தகவலுக்கு சமூக வலைதளம் மூலம் அவர் அளித்துள்ள விளக்கம் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

நேஷனல் கிரஷ்

2018 ஆம் ஆண்டு வெளியான கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்களை மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் தன் பக்கம் கொண்டு வந்தவர் ராஷ்மிகா மந்தனா. டியர் காம்ரேட் படத்திலும் இவர் நடித்த கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது. தமிழ் பக்கம் நடிக்க மாட்டாரா என்று ஏங்கும் அளவிற்கு தனது ஸ்லிம் மற்றும் ஸ்டைலால் ஏங்க வைத்தார். சுல்தான் படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் செய்து வைத்தார் இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன்.

சூப்பர் டூப்பர் ஹிட்

சுல்தான் படத்தில் கார்த்தியுடன் இணைந்து நடித்தார் ராஷ்மிகா மந்தனா. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு அந்த படம் வரவேற்பை பெறவில்லை. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று பல மொழிகளில் வெளியான புஷ்பா படத்தின் மூலம் தனது நடிப்பை நிரூபித்தார் ராஷ்மிகா. அந்த படத்தில் இடம் பெற்ற ஸ்ரீ வள்ளி மற்றும் சாமி சாமி பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. புஷ்பா படத்தில் ஓ சொல்றியா மாமா பாடலுக்கு சமந்தா நடனம் ஆடி, அது வேற லெவல் ஹிட் ஆனதும் குறிப்பிடத்தக்கது.

நல்லா தான் இருக்கும்

சமீபத்தில் விஜய்யுடன் இணைந்து வாரிசு படத்தில் நடித்து அசத்தினார் ராஷ்மிகா. வாரிசு படத்தில் இடம்பெற்ற ரஞ்சிதமே பாடல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது. நேஷனல் கிரஷ் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் ராஷ்மிகாவுக்கு 5 சொகுசு பங்களா உள்ளதாக சமூகவலைத்தளத்தில் பலர் கூறி வந்தனர். இந்த தகவல்கள் வைரலாகி வந்த நிலையில், ராஷ்மிகா காதுகளுக்கும் சென்றது. இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக “5 பங்களாவா? இருந்தா நல்லா தான் இருக்கும், ஆனா இல்லையே” என்று பதிவிட்டுள்ளார் ராஷ்மிகா. இந்த பதிவுகள் தற்போது பலரின் கவனம் ஈர்த்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here