தெலுங்கு நடிகரான பிரபாஸுக்கும் கிருத்தி சனோனுக்கும் விரைவில் திருமணம் நிச்சயதார்த்தம் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

ரீச் ஆன பிரபாஸ்

2002 ஆம் ஆண்டு ஈஸ்வர் என்ற படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர் நடிகர் பிரபாஸ். 2015 ஆம் ஆண்டு பாகுபலி என்ற பிரம்மாண்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் பாலிவுட் அளவுக்கு ரீச் ஆகி விட்டார். பாகுபலி படத்திற்குப் பிறகு இவர் நடித்து வெளியான சாகோ, ராதே ஷியாம் ஆகிய படங்கள் சுமாரான படங்களாகவே அமைந்தது. தற்போது பிரபாஸ் நடிப்பில் வெளியாக இருக்கும் ஆதிபுருஷ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கூட்டி உள்ளது. ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸ் ராமராகவும், கிருத்தி சனோன் ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள். இப்படத்தில் சய்ஃப் அலி கான், சன்னி சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராமாயணத்தை மையமாக வைத்து பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு ப்ரொமோஷன்கள் நடந்து கொண்டிருக்கின்றது.

உண்மையா? வதந்தியா?

ஆதிபுருஷ் படத்தில் நடிக்கும் போது பிரபாஸுக்கும், அவருக்கு ஜோடியாக நடிக்கும் கிருத்தி சனோனுக்கும் காதல் மலர்ந்துள்ளதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும், அதற்கான நிச்சயதார்த்த வேலைகள் மாலத்தீவில் நடந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது. நிச்சயதார்த்தம், திருமணம் குறித்து இருவரும் எந்த ஒரு தகவலையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடாத நிலையில், சமூக வலைதளங்களில் செய்திகள் மற்றும் உலா வருகின்றது. இந்த நிச்சயதார்த்தம், திருமணம் குறித்து வெளிவந்துள்ள தகவல்கள் உண்மையா? அல்லது வதந்தியா? என்று இருவர்களில் யாராவது ஒருவர் அதிகாரபூர்வமாக தெரிவித்தால் மட்டுமே தெரியும். ஏற்கனவே பிரபாஸுக்கும் அவருடன் பாகுபலி படத்தில் ஜோடியாக நடித்த அனுஷ்கா செட்டிக்கும் காதல், திருமணம் போன்ற பல கிசுகிசுக்கள் சோசியல் மீடியாக்களில் வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here