தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை சமந்தா மும்பையில் வீடு வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

முன்னணி நடிகை

தமிழில் பாணா காத்தாடி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான நடிகை சமந்தா. நான் ஈ படத்தின் மூலம் பல ரசிகர்களை உருவாக்கினார். தெலுங்கு மற்றும் தமிழில் அதிகம் கவனம் செலுத்தி வந்த நடிகை சமந்தா, கத்தி, தங்க மகன், தெறி, மெர்சல் என்று முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து பணிபுரிய தொடங்கினார். சூர்யா, விஜய், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என்று பல ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

வேறு பரிமாணம்

சமீபத்தில் புஷ்பா படத்தில் இவர் நடனமாடிய “ஓ சொல்றியா மாமா” பாடல் மூலம் சமந்தாவின் வேறு பரிமாணத்தை ரசிகர்கள் பார்த்தனர். சமந்தாவின் நடிப்பில் சாகுந்தலம் எனும் திரைப்படத்தின் போஸ்ட் ப்ரடக்ஷன் பணிகள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றது. அதுமட்டுமில்லாமல் விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து குஷி என்ற படத்திலும் அவர் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றது.

மும்பையில் செட்டில்?

உடலில் பல பிரச்சனைகள் இருந்தாலும் அது அனைத்தையும் சமாளித்து விட்டு, தனக்குத்தானே தைரியம் சொல்லிக் கொண்டு பல படங்களில் கமிட் ஆகி வருகிறார் சமந்தா. தற்போது பாலிவுட்டிலும் நுழைந்துள்ளார். சிட்டாடல் என்ற வெப் சீரிஸ் ஷூட்டிங்கில் பங்கேற்று வரும் நடிகை சமந்தா, மும்பையில் தங்கி வருகிறார். இந்த வெப்தொடர் அமேசான் பிரைம்மில் வெளிவர உள்ளது. முழுக்க முழுக்க மும்பையில் படமாக்கப்பட்டு வருகின்றது. அது மட்டும் இல்லாமல் சமந்தா பல ஹிந்தி திரைப்படங்களில் கமிட்டாகி இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. தற்போது சமந்தா மும்பையில் ரூ.15 கோடியில் வீடு வாங்கி இருப்பதாகவும் கூறுகின்றனர். அதிக ஹிந்தி படங்களில் கமிட்டாகி இருப்பதால் தான் அவர் மும்பையில் வீடு வாங்கி செட்டில் ஆகிவிட்டார் என்று சினிமா வட்டாரத்தில் பேச்சு நிலவுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here