தவறுகளில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்கள்தான் இன்று தான் இந்த நிலைமைக்கு உயர காரணமாக இருந்ததாக நடிகை பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார்.

இளம் நடிகை

2012 ஆம் ஆண்டு முகமுடி என்ற படத்தின் மூலம் திரை உலகுக்கு அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இயக்குநர் மிஷ்கின் எழுதி, இயக்கிய இந்த படத்தில் ஜீவா, நரேன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். அதைதொடர்ந்து தெலுங்கு மற்றும் ஹிந்தியில் கவனம் செலுத்தி வந்த நடிகை பூஜா ஹெக்டே, பீஸ்ட் படத்தின் மூலம் தமிழில் கம் பேக் கொடுத்தார். நெல்சன் திலிப் குமார் இயக்கிய இந்த படத்தில் விஜய், செல்வராகவன் போன்ற பலரும் நடித்திருந்தனர்.

ட்ரெண்டாகும் போட்டோஸ்

பீஸ்ட் படத்தில் இடம் பெற்ற அரபிக்குத்து, ஜாலியோ ஜிம்கானா பாடல்கள் இன்றும் யூடியூபில் ட்ரெண்ட் ஆக உள்ளது. அதன்பிறகு மீண்டும் தெலுங்கு மற்றும் இந்தியில் கவனம் செலுத்தி வரும் பூஜா ஹெக்டே ரசிகர்களை கவரும் வண்ணம் தனது இன்ஸ்டா பக்கத்தில் பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அவர் வெளியிட்டு வரும் பிகினி மற்றும் போட்டோ சூட் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

அட்வைஸ்

ஏற்கனவே நீங்கள் நடித்த சில படங்கள் சரியாக போகவில்லையே என்று அவரிடத்தில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பூஜா ஹெக்டே பதில் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது “வாழ்க்கையில் எதுவும் நமது கையில் இல்லை, நாம் செய்யும் வேலைகளுக்கு எந்த பலன் வந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். சொந்த வாழ்க்கையாக இருந்தாலும் சரி, சினிமாவாக இருந்தாலும் சரி. சில முடிவுகளின் பலன்கள் நமது கையில் இல்லை. எதுவாக இருந்தாலும் தவறு நடந்தால் அதற்கான காரணங்களை முழுமையாக ஆராய்ந்து திருத்திக் கொள்ள முயற்சி செய்கிறேன். நான் செய்த தவறுகளில் இருந்து கற்றுக் கொண்ட படங்கள் தான் நான் இன்று இந்த நிலைமைக்கு உயர காரணம். சில சமயங்களில் நாம் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்றால். நாம் எடுத்த முடிவு தவறு என்று நினைக்கக் கூடாது. எது நடந்தாலும் நம்பிக்கையோடு முயற்சி செய்ய வேண்டும்” என்று பூஜா ஹெக்டே கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here