சின்னத்திரை நடிகர்களான பிரிட்டோ மனோ மற்றும் சந்தியா ராமச்சந்திரன் ஆகியோர் திருமணம் செய்துகொள்ளப் போவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

விஜய் டிவி பிரபலம்

சின்னத்திரை நடிகரான பிரிட்டோ மனோ “அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா” என்ற நிகழ்ச்சி மூலம் அறிமுகமானார். விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னதம்பி என்ற தொடரின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்தார். ப்ரஜின் மற்றும் பாவனி ரெட்டி இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்கள். சின்னத்தம்பி தொடருக்கு பிறகு சரவணன் மீனாட்சி, ராஜா ராணி 2 என்ற தொடரிலும் நடித்து பிரபலமானார் பிரிட்டோ. தொகுப்பாளராகவும் இருந்து வரும் பிரிட்டோ மனோ, தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் “தவமாய் தவமிருந்து” என்ற தொடரில் நடித்து வருகிறார்.

காதல் திருமணம்!

“தவமாய் தவமிருந்து” தொடரில் தன்னுடன் ஜோடியாக நடிக்கும் சந்தியா ராமசந்திரனுடன் பிரிட்டோவுக்கு கடந்த ஜனவரி மாதம் 25ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. நூறு எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் தவமாய் தவமிருந்து தொடரில் நடித்து வந்த இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. சமீபத்தில் அவர்களது திருமண நிச்சயதார்த்தம் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர். புகைப்படங்களை பார்த்த ரசிகர்களும் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here