நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை பாவனா மீண்டும் தமிழில் நடிக்க இருப்பது அவரது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

திறமையான நடிகை

2002ஆம் ஆண்டு மலையாள படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான நடிகை பாவனா, சித்திரம் பேசுதடி என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். 2006 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தை இயக்கியவர் மிஷ்கின். நரேன் ஹீரோவாக நடித்த இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. கிழக்கு கடற்கரை சாலை, வெயில், தீபாவளி, கூடல் நகர், ஆர்யா, ராமேஸ்வரம் என்று தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடித்து வந்த பாவனாவுக்கு ஜெயம்கொண்டான் திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. கேரளாவில் பிறந்து வளர்ந்த நடிகை பாவனா மலையாளம், தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். கடைசியாக தமிழில் இவர் நடித்து வெளியான திரைப்படம் அசல். அஜித், சமீரா ரெட்டி, பாவனா உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்திருந்தனர். அது மட்டும் இல்லாமல் இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை. அதன்பிறகு மற்ற மொழிகளில் கவனம் செலுத்தி வந்த பாவனா, தற்போது மீண்டும் தமிழில் நடிக்க இருக்கிறார்.

ரீ என்ட்ரி

நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் தமிழில் நடிப்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. இவர் நடிக்கப் போகும் படத்தில் ஹீரோவாக கணேஷ் வெங்கட்ராமன் நடிக்கிறார். இயக்குநர் ஜெய் தேவ் இப்படத்தை இயக்க, கௌதம் ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்கிறார். திரில்லர் படமாக உருவாக இருக்கும் இந்த படத்தின் சூட்டிங் கொடைக்கானலில் நடந்து கொண்டிருக்கின்றது. இந்த படத்தைப் பற்றி நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் கூறும் போது “திறமையான பாவனா, அசல் படத்திற்குப் பிறகு தற்போது தமிழ் படத்தில் நடிக்கிறார். அவருடன் நடிப்பது சிறந்த அனுபவம். இந்த படம் ஹாரர் திரில்லர் கதை அம்சத்தில் உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. சமீபத்தில் விஜய்யுடன் வாரிசு படத்தில் நான் வில்லனாக நடித்த கதாபாத்திரம் எனக்கு பாராட்டுகளை பெற்று தந்தது. அந்தப் படத்திற்கு பிறகு பல படத்தில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றது” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here