நான் நடிக்கும் படத்தின் அப்டேட் கேட்காதீர்கள் என்றும் எப்போது கொடுக்க வேண்டுமோ அப்போது தருவோம் என்றும் ஜூனியர் என்டிஆர் கூறியிருக்கிறார்.

மாபெரும் வெற்றி

2001 ஆம் ஆண்டு ஹீரோவாக நடிக்க துவங்கிய ஜூனியர் என்டிஆர், தற்போது தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருக்கிறார். கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளியான RRR திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இணைந்து நடித்திருந்தனர். ராஜமௌலி இயக்கிய இப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

படத்தின் மீது ஆர்வம்

RRR படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆர் இயக்குநர் கொரட்டாலா சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இன்னும் இந்த படத்திற்கு பெயர் வைக்காத நிலையில், என்டிஆர் 30 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. RRR படத்தின் வெற்றி காரணமாக இப்படத்தின் மீது உள்ள ஆர்வமும், வரவேற்பும் அதிகரித்துள்ளது.

மனஅழுத்தம் வருது

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் ஜூனியர் என்டிஆர்-ரிடம், அவர் நடிக்கும் 30வது படம் குறித்த அப்டேட்டுகளை கேட்டுள்ளனர். அதற்கு ஜூனியர் என்டிஆர் கூறியதாவது “நாங்கள் ஒரு படத்தை உருவாக்கும் போது உண்மையில் அதைப்பற்றி எதையும் சொல்ல முடியாது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணி நேரமும் அப்டேட் கொடுப்பது என்பது மிகவும் கடினமான விஷயம். உங்களின் ஆர்வம் எங்களுக்கு புரிகின்றது. ஆனால் அது சில சமயங்களில் தயாரிப்பார்கள் மற்றும் இயக்குநர்களுக்கு மன அழுத்தத்தை கொடுத்து விடுகிறது. அப்படியே கொடுக்கும் அப்டேட்டுகள் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் ட்ரோல் செய்கிறார்கள். ஏதாவது அப்டேட்கள் இருந்தால் கண்டிப்பாக எங்கள் மனைவிகளிடம் சொல்வதற்கு முன்பு உங்களிடம் நான் முதலில் கூறுவோம்” என்று கூறியுள்ளார். இவர் பேசிய இந்த பதிவு தற்போது சமூக வலைதலங்களில் வேகமாக பரவுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here