கழுகு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை பிந்து மாதவி தற்போது கூறியுள்ள விஷயத்தால் ரசிகர்கள் ஷாக்கில் உள்ளனர்.

ஹிட் படங்கள்

கழுகு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை பிந்து மாதவி, சட்டம் ஒரு இருட்டறை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற பல படங்களில் நடித்து வந்தார். ஆரம்பத்தில் இவர் நடிக்கும் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், ஜாக்சன் துரை, கழுகு 2 போன்ற படங்கள் வந்த இடம் தெரியாமல் போனது.

அடுத்தடுத்த படங்கள்

2019 ஆம் ஆண்டு வெளிவந்த கழுகு 2 படத்துக்கு பிறகு எந்த படத்திலும் ஒப்பந்தம் ஆகாமல் இருந்த நடிகை பிந்து மாதவி, தற்போது யாருக்கும் அஞ்சேல் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடுக்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. மேலும் பகைவனுக்கு அருள்வாய், மாயன் உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்து வருகிறார். பிக் பாஸ் சீசன்1 இல் கண்டஸ்டன்ட்டாக பங்கேற்ற பிந்து மாதவி, 96வது நாள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தார்.

கிளாமர்

கடந்த இரண்டு நாட்களாக பிந்து மாதவி ட்ரெண்டாக உள்ளார். அதற்கு காரணம் அவர் கொடுத்துள்ள அறிக்கை தான். பிந்து மாதவி கூறுகையில் “பட வாய்ப்புக்காக யாரும் கவர்ச்சியாக நடிப்பதில்லை, கதைக்கு தேவைப்பட்டால் மட்டுமே கவர்ச்சியாக நடிக்கின்றனர். கதைக்கு தேவைப்பட்டால் நானும் கவர்ச்சியாக நடிப்பேன் என்று வெளிப்படையாக கூறியுள்ளார் பிந்து மாதவி. எப்பொழுதும் ஹோம்லி லுக்கில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை பிந்து மாதவி சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருவார். தற்போது பிந்து மாதவி இப்படி ஒரு ஸ்டேட்மெண்ட்டை வெளியிட்டு இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here