வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்துவதாக பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் கொடுத்த புகாரின் பேரில் அவரது கணவரை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சர்ச்சை நடிகை

எப்பொழுதும் தன்னை சுற்றி பல சர்ச்சைகளை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும் நடிகை ராக்கி சாவந்த். அடிக்கடி இவரது கவர்ச்சி வீடியோக்களும், மீடியாவுடன் மல்லுக்கட்டும் வீடியோக்களும் சமூக வலைதளத்தில் பரவிக்கொண்டே இருக்கும். நடிகை ராக்கி சாவந்த், 2019 ஆம் ஆண்டு ரிதேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக 2022 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்துகொண்டனர்.

2-வது திருமணம்

தனது விவாகரத்துக்கு பிறகு, அடில் கான் துரானி என்பவரை காதலித்து வந்த நடிகை ராக்கி சாவந்த், கடந்த ஆண்டு அவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்து மதத்தைச் சேர்ந்த ராக்கி சாவந்த் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த காதலரான அடில் கான் துரானியை திருமணம் செய்து கொண்டது, மீடியாக்களில் பல சர்ச்சைகளுடன் வெளியானது. தற்போது இவருடனும் ராக்கி சவாந்துக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அடில் கான் துரானி தன்னிடம் வரதட்சனை கேட்டு மிரட்டி அடிப்பதாகவும், தன்னிடம் இருக்கும் பணம், நகைகளை கேட்டு சண்டை போடுவதாகவும் போலீசில் புகார் அளித்துள்ளார் நடிகை ராக்கி சாவந்த்.

உண்மையா? பொய்யா?

ராக்கி சாவந்த் கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரது கணவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். போலீசார் கைது செய்யும் புகைப்படங்களையும், சோசியல் மீடியாவில் பரவி வரும் வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகை ராக்கி சாவந்த். ஏற்கனவே விவாகரத்தான ராக்கி, தற்போது கணவர் மீது புகார் கூறியிருப்பது உண்மையா? அல்லது விளம்பரத்திற்காக இவர் பொய்யான புகாரை அளித்துள்ளாரா? என்று சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here