லியோ பட சூட்டிங்கில் இருந்து நடிகை திரிஷா வெளியேறிவிட்டதாக செய்திகள் வெளியான நிலையில் தான் காஷ்மீரில் இருப்பதாக கூறி அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விறுவிறு படப்பிடிப்பு

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா நடிக்கும் திரைப்படத்திற்கு லியோ என்று பெயரிடப்பட்டது. இதில் கௌதம் வாசுதேவன், அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர் என பல பேர் கமிட் ஆகியுள்ளனர். லியோ திரைப்படம் ஆயுத பூஜை அன்று அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் டைட்டில் டீஸர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று சாதனை படைத்தது. லியோ பட சூட்டிங்கிற்காக படக்குழுவினர் தனி விமானம் மூலம் காஷ்மீருக்கு சென்றனர். 14 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யும் திரிஷாவும் இணைந்து நடிப்பதால், இந்த படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அது மட்டுமில்லாமல் லோகேஷ் கனகராஜ் இயக்கிய அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் ஆன நிலையில், விஜய், திரிஷா, லோகேஷ் கனகராஜ் கூட்டணி மாஸாக இருக்கும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஷூட்டிங் என்னாச்சு?

லியோ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்புகள் நடந்து வந்த நிலையில், நடிகை திரிஷா காஷ்மீர் சென்ற மூன்றாவது நாளே சென்னை திரும்பி வந்துவிட்டார் என்ற தகவல் வந்தது. திரிஷா சென்னை திரும்பியதாக கூறப்படும் புகைப்படங்களும், வீடியோவும் வெளியாகி, இணையத்தில் வேகமாக பரவத் தொடங்கியது. இது சினிமா வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இயக்குநர் லோகேஷ் கனகராஜிக்கும், திரிஷாவிற்க்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக படத்தை விட்டு விலகி விட்டாரா? அல்லது தன்னுடைய பாகத்தை மட்டும் சூட்டிங் முடித்துவிட்டு சென்னை திரும்பி விட்டாரா? என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேள்வி கேட்டு வந்தனர். அது மட்டும் இல்லாமல், காஷ்மீர் குளிரில் இருந்ததால் திரிஷாவுக்கு உடல்நிலை சரியில்லை என்றும் கூறப்பட்டது.

விளக்கம்

இந்த நிலையில், நேற்று நடிகை திரிஷாவின் தாயார், லியோ படப்பிடிப்பில் தான் திரிஷா இருக்கிறார் என்றும் அவர் சென்னை திரும்பவில்லை என்றும் விளக்கம் அளித்து இருந்தார். அதனைதொடர்ந்து, சற்றுமுன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கும் நடிகை திரிஷா, தான் காஷ்மீரில் தான் இருக்கிறேன் என்பதை உறுதி செய்துள்ளார். இதனை அடுத்து அவர் சென்னை திரும்பி விட்டதாக கூறிய அனைத்து செய்திகளும் வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here