சென்னையில் நடந்த கல்லூரி விழா ஒன்றில் பங்கேற்ற நடிகை நயன்தாரா மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

முன்னணி நடிகை

நயன்தாரா என்ற பெயரைச் சொன்னால் குழந்தைகளுக்கு கூட தெரியும் என்கிற அளவிற்கு முன்னணி நடிகை லிஸ்டில் பல வருடங்களாக இருந்து வருகிறார். ஐயா படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான நடிகை நயன்தாரா, அதன்பின் முன்னணி ஹீரோக்களான ரஜினிகாந்த், சூர்யா, விஜய், விக்ரம், தனுஷ், அஜித் என்று அனைத்து நடிகர்களுடனும் ஹீரோயினாக நடித்து விட்டார்.

ஹிந்தியில் அறிமுகம்

கவர்ச்சியாக பல படங்களில் நடித்திருந்தாலும், தற்போது பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நயன்தாரா. அந்த வகையில், இவர் நடிப்பில் வெளியான மாயா, டோரா, ஐரா, அறம் போன்ற பல படங்கள் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை அட்லீ இயக்க, அனிருத் இசை அமைக்கிறார்.

அட்வைஸ் கொடுத்த நயன்

காதல், திருமணம், குழந்தைகள் என்று ஒட்டுமொத்தமாக சர்ச்சைகளுக்கு பேர் போன நடிகை நயன்தாரா, தற்போதும் லேடி சூப்பர் ஸ்டார் என்ற ஸ்தானத்துடன் முன்னேறி நிற்கிறார். இதனிடையே, சமீபத்தில் சென்னையில் நடந்த கல்லூரி விழாவிற்கு நயன்தாரா சிறப்பு விருந்தினராக சென்றுள்ளார். அங்கு மாணவர்களிடம் பேசிய நயன்தாரா, “கல்லூரி காலத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் உங்கள் வாழ்க்கையை மாற்றக் கூடியது என்பதை மறந்துவிடக்கூடாது, படித்து முடித்து உயரத்தை அடைந்த பிறகும் எப்போதும் பணிவுடன் இருக்க வேண்டும்” என்று மாணவர்களுக்கு அறிவுரையும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here