நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தை பிரபல இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் நேரில் சந்தித்து பேசியது அனைவரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

பிரபல இயக்குநர்

பிரபல இயக்குநரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர், 1981-ம் ஆண்டு ‘சட்டம் ஒரு இருட்டறை’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். அதனைதொடர்ந்து தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் படங்களை இயக்கியுள்ளார். இவரின் பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது சமுத்திரக்கனி, இனியா, சாக்ஷி அகர்வால், சரவணன், ரோகிணி ஆகியோர் நடிப்பில் உருவாகும் ‘நான் கடவுள் இல்லை’ என்ற படத்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கி வருகிறார். இப்படம் வருகிற பிப்ரவரி 3-ம் தேதி வெளியாகவுள்ளது.

உருக்கம்

இந்நிலையில், நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் நேரில் சந்தித்து பேசினார். இதுதொடர்பான புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள எஸ்.ஏ.சந்திரசேகர், அதில் ‘என் உயிரை நான் சந்தித்த போது’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது கவனம் ஈர்த்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here